இலங்கைக்கான சோசலிச கட்சியின் மேதின கூட்டம் வவுனியாவில் இடம்பெற்றது. அமெரிக்காவின் கொலைவெறி ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராடுவோம் மற்றும் டொலர் ஆதிக்கத்தை தோற்க்கடிப்போம் எனும் தொனிப்பொருளில் இலங்கைக்கான சோசலிச கட்சியின் மே தினக்கூட்டம் வவுனியா இறம்பைக்குளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று இடம்பெற்றது.
கட்சியின் தலைவர் ந.தேவகிருஸ்ணன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் குருநாகல் மாவட்டத்தின் செயலாளர் என்.ஜி.எஸ். விஜியசிங்க, வவுனியா மாவட்டசெயலாளர் கு.ரெட்ணகாந்தன், சண்முகதாசன் கற்கை நிலையத்தின் ச.நடராசாம், கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பொதுமக்கள் கலந்துக் கொண்டிருந்தனர்.
