ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2022 முதல் 2024 வரை 23 வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக 1.27 பில்லியன் ரூபா செலவிட்டுள்ளதாக நளிந்த ஜயதிஸ்ஸ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி 2022ஆம் ஆண்டு 4 சுற்றுப்பயணங்களும் 2023ஆம் ஆண்டு 14 சுற்றுப்பயணங்கள் மற்றும் 2024ஆம் ஆண்டு 5 சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.