இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இக் கிரிக்கெட் தொடரின் 37 வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
குறித்த போட்டியானது சென்னையில் இடம்பெற்றதோடு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் இடையில் போட்டிகள் இடம்பெற்ற நிலையில் குஜராத் டைட்டன்ஸ் முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 158 ஓட்டங்களை பெற்றது.
சென்னை அணியில் அதிகபட்சமாக 74 ஓட்டங்களை ருதுராஜ் கெய்க்வாட் பெற்றுக் கொடுத்தார்.
குஜராத் டைட்டன்ஸ் 16.4 ஓவர்கள் நிறைவில் 2 விக்கட்டுக்களை இழந்து வெற்றியை தம் வசப்படுத்தியது.
குஜராத் அணியில் அதிகபட்சமாக 87 ஓட்டங்களை சாய் சுதர்ஷன் பெற்றுக் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.
