நியூஃபவுண்ட்லேண்ட் மற்றும் லேப்ரடார் ஹைட்ரோ நிறுவனத்தின் நிர்வாக குழுவில் பணியாற்றி வந்த முக்கிய உறுப்பினர் ஒருவர் தன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
குறித்த உறுப்பினர் தனியார் துறை சார்ந்த வேலைக்கு செல்லவுள்ளமையால் ஹைட்ரோ நிறுவனத்திலிருந்து விலகுகின்றார்.
சர்ச்சில் ஃபால்ஸ் புரிந்துணர்வு ஒப்பந்தத்தினால் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், அரசுக்குச் சொந்தமான ஹைட்ரோ மின்சார நிறுவனத்திற்கு இது ஒரு முக்கியமான தருணமாகும் என சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
