மொன்ட்ரியலில் 14 வயது மாணவி ஒருவரை, 17 வயது சிறுவன் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மொன்ட்ரியல் நகரில் உள்ள நோட்ரே-டேம்-டி-க்ராஸ் (Notre-Dame-de-Grâce – NDG) பகுதியில் உயர்நிலைப் பள்ளிக்கு வெளியே, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தத் தாக்குதல் தொடர்பாக 17 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்து, கொலை முயற்சி உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தாக்குதலில் படுகாயமடைந்த மாணவி உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதுடன், அவருக்கு தீவிர மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டது.
தற்போது அந்த மாணவியின் உயிருக்கு ஆபத்து இல்லை என்பதை, காவல்துறை உறுதி செய்துள்ளது.
செவ்வாய்க்கிழமை காலை École St-Luc Annex பள்ளியின் பிரதான பகுதியான Terrebonne தெருவில் மாணவி வகுப்புக்குச் சென்றுகொண்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நிகழ்ந்தது.
அரசுத் தலைமை வழக்கறிஞர் அலுவலகத்தின் (DPCP) தகவலின்படி, கைது செய்யப்பட்ட சிறுவன் மீது கொலை செய்ய முயற்சி (Attempt to commit murder) மற்றும் குற்றம் செய்ய ஆயுதம் வைத்திருத்தல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
