வவுனியா கனகராயன்குளம் குளத்தில் மூழ்கி இன்று இளைஞர் ஒருவர் உயிரழந்துள்ளார்.
குறித்த இளைஞர் இன்று மாலை கனகராயன்குளப்பகுதியில் மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளார். இதன்போது குளத்தில் மூழ்கி உயிரழந்துள்ளார் .
இச் சம்பவத்தில் உயிரிழந்த இளைஞர் அதே பகுதியை சேர்ந்த ம. ஈழவன் என்ற 23வயதுடைய இளைஞர் எனத்தெரியவந்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக கனகராயன் குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
