Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதித்துறையை சரியான முறையில் கட்டமைக்க வேண்டும் – பா.உ.கந்தசாமி பிரபு

ஜூலை 31, 2026
படிக்க 3 நிமிடங்கள்
SHARE

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை (31) அபிவிருத்தி குழு தலைவரும் அமைச்சருமான சுனில் ஹிந்து நெத்தி தலைமையில் பழைய கச்சேரி மண்டபத்தில் நடைபெற்றது. இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்கு வரவு செலவு திட்டத்தின் ஊடாக 10 ஆயிரத்து 400 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்ட பெறுமதியான வேலைத்திட்டம் தொடர்பான விடயங்கள் கலந்தாலோசிக்க பட்டிருந்தது அது தொடர்ச்சியான மாவட்டத்தின் அபிவிருத்திக்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு வருகிறது

அதேபோன்று கடந்த மாதம் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அபிவிருத்திக்குழு கூட்டத்தில் மயிலத்தமடு மாதவனை காணி தொடர்பாக அவர்கள் எதிர்பார்க்கின்ற 3 ஆயிரம் ஏக்கர் காணியை விடுவிப்பது தொடர்பான முன்னேற்றம் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளதுடன் அந்த காணிகளை விரைவில் விடுவிப்பதற்கான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ளும்.

அதேபோன்று மழை வெள்ளம் ஏற்படும் காலத்தில் போக்குவரத்து தடை ஏற்படும் கிரான் பொண்டுகள்சேனை பாலங்கள் நிர்மாணிப்பதற்காக அதற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் நடவடிக்கை தொடர்பாகவும்.

மாவட்டம் வாவிகள் நிறைந்த மாவட்டம் படுவான் கரைக்கும் எழுவான் கரைக்கும் இடையிலான மண்டூர் பாலம், பழுகாமம் மற்றும் வெல்லாவெளிக்கான பாலம் மற்றும் வீதிகள் அமைக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டு அதற்கான ஆய்வு அறிக்கைகளையும் செலவாகின்ற நிதி தொடர்பான அறிக்கைகளையும் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

மற்றும் யானை மனித மோதல் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது அதனை தடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள யானை வேலி தொடர்பாகவும் குடிநீர் தொடர்பான பிரச்சனை தீர்ப்பதற்கு கோறளைப்பற்று பிரதேசத்தில் வாழைச்சேனை கடதாசி ஆலையில் இருக்கும் தண்ணீர் தாங்கி அபிவிருத்தி செய்வது தொடர்பாக அதற்கு கோரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது

அதேவேளை வாகனேரி குளத்தின் நீரின் கொள்ளளவை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் வெல்லாவெளியில் உள்ள கிந்துரு குளத்தில் இருந்து நீரை பெற்றுக் கொண்டு வெல்லாவெளி பிரதேசத்திலுள்ள நீர் பிரச்சனையை பூர்த்தி செய்வது தொடர்பான ஏற்பாடுகள் முன்னெடுத்து வருகின்றோம்.

ஆகவே மாவட்டத்தில் எதிர்காலத்தில் ஏற்படுகின்ற குடிநீர் தட்டுப்பாட்டுக்கு ஆரம்பகட்ட திட்டங்களை ஒருங்கமைத்துள்ளோம். அதேபோன்று ஜனாதிபதியின் ஊடான கலந்துரையாடலில் குடிநீர் பிரச்சனைகளை முன்னெடுத்து வருகிறோம்

உயர்நீதிமன்ற நீதிபதிகளை வயதெல்லைகள் அதிகரிப்பு தொடர்பாக பேசும் பொருளாக இருந்து வருகின்றது கடந்த காலங்களில் உயர் நீதிபதிகளின் வயதெல்லை தொடர்பாகவும் அதனை தாண்டி கடந்த காலங்களில் இருக்கின்ற உயர் நீதிபதிகள் தொடர்பில் கடந்த ஆட்சியாளர்கள் எதிர்மறையான சிந்தனையில் செயற்பட்டுக் கொண்டனர்.

இப்போது இருக்கின்ற எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து கொண்டு இந்த வயதெல்லை அதிகரிப்பதில் மாறுபாடான கருத்துக்களை உருவாக்கி கொண்டிருக்கின்றனர் உதாரணமாக சாரை பாம்புக்கு மண்ணெண்னை ஊற்றினால் எப்படி பதறும் அதுபோல போல பதறியடித்துக் கொண்டு திரிவதை பார்க கூடியதாக இருக்கின்றது.

கூட்டுச் சேர மாட்டோம் என்பவர்கள் இன்று கூட்டுச் சேர்ந்து கொண்டு இன்று இந்த வயதெல்லை அதிகரிப்பதை எதிர்க்கின்ற நிலை உருவாகியுள்ளது இதில் இந்த சங்கத்தினர் இணைந்துள்ளனர் இவர்களின் நோக்கம் மக்களை குழப்பி தங்கள் காலத்தில் இருந்த குற்ற செயல்களில் இருந்து தாங்கள் விடுவித்து கொண்டு தப்பிக் கொள்வதற்காக முயற்சியை மேற்கொள்கின்றனர்.

ஒரு நீதி விசாரணை மேற்கொள்வதாக இருந்தால் நீண்ட காலம் எடுக்கும் விசாரணை இறுதி கட்டம் அடையும் போது இந்த நீதிபதியை மாற்றி இன்னும் ஒரு நீதிபதியை நியமிப்பதன் ஊடாக அந்த விசாரணை மீண்டும் மீள் இருந்து ஆரம்பிக்க வேண்டிய நிலமை இருக்கின்றது

அதனால் காலம் வீணடிக்கப்படும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பா விசாரணை கூட தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

அந்த விசாரணை இன்னமும் முடிவடைகின்ற நிலமை இல்லாத நிலை ஏற்படுகிறது எனவே இலங்கையில் நீதி துறையை சரியான கட்டமைப்புக்குள் கொண்டுவர வேண்டும் என்பதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முனைப்புடன் இருக்கிறது நிலுவையில் உள்ள விசாரணைகளை துரிதப்படுத்தி அவர்களை நீதி கட்டமைப்புக்குள் கொண்டுவந்து அவர்களுக்கான தண்டனையே விடுவிப்பே எதே ஒரு தீர்ப்பு ஒன்றை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலே இருக்கின்றோம்.

இது தொடர்பாக இவர்கள் என்ன குழப்ப நிலை செய்திருந்தாலும் இறுதியில் மக்கள் நலன் சார்ந்ததாக நீதித்துறை சரியான முறையில் கட்டமைக்க வேண்டும் என்பதிலே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிலையாக நிற்கின்றது என்றார்.

முந்தைய செய்தி மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்
அடுத்த செய்தி தெல்லிப்பளையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழ். கோட்டை மற்றும் யாழ். பழைய கச்சேரியை மரபுசார் சுற்றுலா தளங்களாக விருத்தி செய்ய நடவடிக்கை….

மே 27, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நிராகரிக்கப்பட்ட 37 வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவு

ஏப்ரல் 4, 2025
இலங்கை

காங்கேசன்துறையில் ‘அலையோடு உறவாடு’ உணவு திருவிழா(Video)

டிசம்பர் 28, 2025
அண்மைய செய்திகள்உலகம்

நேட்டோ படையிலிருந்து போர்க்கப்பல்களின் எண்ணிக்கையை குறைக்கிறது அமெரிக்கா

ஜூன் 15, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?