கியூபெக் மாகாணத்தில் குடும்ப வன்முறை மற்றும் பெண்களுக்கு எதிரான கொலைகள் (Femicides) அபாயகரமான முறையில் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, புதிய முதலமைச்சர் கிறிஸ்டின் ஃப்ரெச்செட் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை முன்வைக்கப் பட்டுள்ளது.
கியூபெக் சொலிடயார் (Québec solidaire) கட்சியின் இணைப் பேச்சாளர் ரூபா கசல் இக்கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார். 2026-ஆம் ஆண்டு தொடங்கி நான்கு மாதங்களிலேயே கியூபெக்கில் 9 பெண்கள் தங்களது துணைவர்களால் கொல்லப்பட்டுள்ளனர். இது 2025-ஆம் ஆண்டு முழுவதற்கும் பதிவான உயிரிழப்புகளுக்குச் சமமானதாகும்.
கியூபெக் மாகாணத்தில் உதவி கோரி அழைக்கும் பெண்களில் 50 சதவீதத்தினருக்குப் போதிய இடவசதி இல்லாத காரணத்தால் தங்குமிடம் (Shelters) மறுக்கப்படுவதாக ரூபா கசல் வேதனை தெரிவித்தார்.
கியூபெக்கில் கேபி ரெனால்ட் சட்டம் (Gabie Renaud Law) என்ற புதிய சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என ரூபா கசல் கோரிக்கை விடுத்துள்ளார். ஒரு பெண் தனது துணைவருக்கு வன்முறைப் பின்னணி ஏதேனும் உள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ள இச்சட்டம் அனுமதிக்கும் தன்மை உள்ளது.
இதன் மூலம், கியூபெக் மாகாணத்தில் பெண்கள் தங்களது பாதுகாப்பை முன்கூட்டியே உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
