முல்லைத்தீவு தெருவில் பகுதியில் பெண்ணொருவரின் உடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண்ணின் சடலம் கிணற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவர் 52 வயதான மூன்று பிள்ளைகளின் தாய் என அறியப்பட்டுள்ளது.
பெண்ணின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மரணம் தொடர்பான விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
