இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதற்காக 181 இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அத்தோடு இதுவரை 24 இந்திய மீன்பிடி படகுகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நேற்று (13) யாழ்ப்பாணத்தில் உள்ள நெடுந்தீவுக்கு அருகில், இலங்கைக் கடல் எல்லைக்குள் மீன்பிடித்தபோது, ஏழு இந்திய மீனவர்களைக் கைதுசெய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
