தாய்லாந்தில் நீடிக்கும் அரசியல் குழப்பத்திற்குத் தீர்வுகாண பிரதமர் பதவியில் இருந்து பெடோங்டார்ன் ஷினவாத் விலக வேண்டும் என்றும் பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்றும் பெரும்பாலான தாய்லாந்து மக்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம் பெடோங்டார்ன் ஷினவாத்தை பிரதமர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கியதைத் தொடர்ந்து பொதுமக்களிடம் கருத்துத் திரட்டப்பட்டது.
புதியவருக்கு வழிவிடும் வகையில் பெடோங்டார்ன் பதவி விலக வேண்டும் என தெரிவித்துள்ளனர். அதேநேரம், புதிதாகத் தேர்தல் நடத்தும் வகையில் தற்போதைய பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் எனவும் மக்கள் கூறியுள்ளனர்.
தாய்லாந்தின் தேசிய வளர்ச்சி நிர்வாகக் கழகம் ஜூலை 4ஆம் திகதி முதல் ஜூலை 7ஆம் திகதி முதல் நடத்தப்பட்ட கருத்தாய்வில் பங்கேற்று அவர்கள் அந்தக் கருத்துகளை வெளிப்படுத்தினர்.
