மொன்றியல் நகரின் முக்கிய பகுதிகளில் அமுலில் உள்ள ‘ஏர்பிஎன்பி’ (Airbnb) போன்ற குறுகிய கால வீட்டு வாடகைக்கான தடையை நீக்க மாநகர சபை தீர்மானித்துள்ளது.
சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கவும், அதேவேளை உள்ளூர் மக்களின் வீடமைப்புத் தேவையைப் பாதுகாக்கவும் இந்த சமச்சீரான முடிவை மாநகர சபை எடுத்துள்ளது.
மொன்றியல் நகரின் வில்-மேரி, லே பிளாட்டோ மற்றும் சுட்-ஓவெஸ்ட் (Sud-Ouest) ஆகிய பகுதிகளில் உள்ள வர்த்தக வலயங்களில் மட்டுமே இந்தத் தடை நீக்கப்படும்.
கியூபெக் சுற்றுலாத் துறையின் (CITQ) அதிகாரப்பூர்வ சான்றிதழ் பெற்றவர்கள் மட்டுமே வீடுகளை வாடகைக்கு விட அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த புதிய விதித் தளர்வுகள் ஜூன் மாத இறுதியில் இருந்தே நடைமுறைக்கு வரும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால், மொன்றியலில் நடைபெறவுள்ள புகழ்பெற்ற ‘கனடிய கிராண்ட் ப்ரீ’ (Canadian Grand Prix) கார் பந்தயம் நடைபெறும் காலத்தில், இந்த வீட்டு வாடகைக்கான தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
