Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

மொன்றியலில் இடம்பெற்ற “சிலுவைப் பாதை” ஊர்வலம்

ஏப்ரல் 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியலின் வரலாற்றுச் சிறப்புமிக்க பழைய நகர் (Old Montreal) பகுதியில் நேற்று நடைபெற்ற ‘சிலுவைப் பாதை’ (Way of the Cross) ஊர்வலத்தில், கியூபெக் அரசின் புதிய Bill 9 சட்டம் குறித்த அச்சம் மேலோங்கியிருந்ததாகக் கூறப்படுகின்றது.

புனித வெள்ளிக்கு ஒரு நாள் முன்னதாக நிறைவேற்றப்பட்ட இந்த Bill 9  சட்டம், பொது இடங்களில் மத ரீதியான வழிபாடுகளை நடத்துவதற்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

கியூபெக் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த புதிய சட்டத்தின்படி, வீதிகள் அல்லது பொதுப் பூங்காக்களில் கூட்டாக மதம் சார்ந்த நிகழ்வுகளை நடத்த முடியாது.

இனிவரும் காலங்களில் இவ்வாறான ஊர்வலங்களை நடத்த வேண்டுமானால், அந்தந்த நகர சபையிடம் (Municipality) ஒவ்வொரு முறைக்கும் தனித்தனியாக உத்தியோகபூர்வ அனுமதி பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது இடங்கள் வழிபாட்டுத் தலங்களாக மாறக்கூடாது என்பதையும், அரசு மதம் சார்ந்த விவகாரங்களில் நடுநிலை வகிக்க வேண்டும் என்பதையுமே இந்தச் சட்டம் உறுதிப்படுத்துவதாக, கியூபெக் மாகாண அரசு தெரிவித்துள்ளது.

இந்த ஊர்வலத்தை வழிநடத்திய மொன்றியல் பேராயர் கிறிஸ்டியன் லெபீன் (Christian Lépine), இச்சட்டத்திற்குத் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

“விளையாட்டுப் போட்டிகளுக்கும், போராட்டங்களுக்கும் அனுமதி வழங்கும் அரசு, மதம் சார்ந்த ஊர்வலங்களுக்கு மட்டும் கூடுதல் நிபந்தனைகளை விதிப்பது எங்களை இரண்டாம் தரப் பிரஜைகளாக மாற்றுவது போன்றது” என, கியூபெக் கத்தோலிக்க ஆயர்கள் சபையின் தலைவர் மார்ட்டின் லாலிபெர்டே (Martin Laliberté) கவலை வெளியிட்டுள்ளார்.

பிரார்த்தனைகளை வீட்டிற்குள்ளேயே முடக்குவது சமூகத்தின் ஒட்டுமொத்த சுதந்திரத்தைப் பாதிக்கும் எனவும் பேராயர் எச்சரித்துள்ளார்.

முந்தைய செய்தி நுனாவிக் பிராந்தியத்தில் பாரிய தீ விபத்து – மூவர் உயிரிழப்பு
அடுத்த செய்தி கனடாவை பிரதிநிதித்துவப்படுத்தும் விண்வெளி வீரர் ஜெரமி ஹான்சன்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் 29,000 பேருக்கு நிரந்தர வதிவிட உரிமை – இன்று முதல் அமலாகின்றது தகுதி அடிப்படையிலான புதிய தேர்வுத் திட்டம்

ஜனவரி 31, 2026
கியூபெக்

மாகாணம் பிரிந்து தனிநாடு அமைப்பதற்கான சட்டபூர்வ கேள்வியை தவிர்த்த பிரதமர் மார்க் கார்னி

மே 27, 2026
கியூபெக்முதன்மை செய்தி

பிரிட்டிஷ் ராஜமுத்திரையான கிரீடத்தை’ (Crown) நீக்க மாகாண அரசு முடிவு

ஜனவரி 26, 2026
கியூபெக்

மொன்றியல் நகர் வீதி பராமரிப்புப் பணிகளில் கடும் பாதிப்பு

மே 12, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?