ஒன்ராறியோ மாகாணத்தின் 2026-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பீட்டர் பெத்லன்பால்வி நேற்று சட்டசபையில் சமர்ப்பித்தார்.
“ஒன்ராறியோவைப் பாதுகாப்பதற்கான திட்டம்” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த பட்ஜெட், பொருளாதாரச் சவால்களுக்கு மத்தியிலும் மக்கள் நலத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக அமைந்துள்ளது.
இந்த ஆண்டு மாகாணத்தின் நிதிப் பற்றாக்குறை 13.8 பில்லியன் டொலர்களாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் வர்த்தகப் பிரச்சினைகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைச் சமாளிக்க 3 பில்லியன் டொலர் அவசர நிதியாக இந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
