வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் உத்தியோகத்தர்களால் வவுனியாவை சேர்ந்த வர்த்தகர்களுக்கு விழிப்புணர்வூட்டும் செயலமர்வு ஒன்று இன்று இடம்பெற்றது.
இதன்போது தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் நுகர்வோர்களின் உரிமைகள் பாதிக்கப்படாதவாறு வர்த்தகர்கள் நடந்துகொள்ள வேண்டிய விதம் தொடர்பாக தெளிவூட்டப்பட்டது.
அத்துடன் பொருட்களை பதுக்கிவைத்தல், மற்றும் அதிகவிலைக்கு விற்கும் வியாபாரிகள் மீது சட்டம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பது தொடர்பாகவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது.
வவுனியா வர்த்தக சங்கத்தின் தலைவர் கிருஸ்ணமூர்த்தி தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் வவுனியாவை சேர்ந்த வர்த்தகர்கள், பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் விசாரணை அதிகாரிகளான யே.எம். கியாஸ், ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
