நாட்டில் மருந்துகளின் விலை உயர்வடைய வாய்ப்புள்ளதாக சிவில் உரிமைகளுக்கான மருத்துவ தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் இவர் மேலும் தெரிவிக்கையில்,
மத்தியகிழக்கில் நிலவும் போர் பதற்ற நிலை, எரிபொருள் விலை உயர்வு, வெளிநாட்டு நாணய பற்றாக்குறை ஆகியவையால் இந்த நிலைப்பாடு என கூறினார்.
மேலும் உயர் இரத்த அழுத்தம், இதய நோய், சர்க்கரை நோய், சிறுநீரக நோய் மனநல பிரச்சினை ஆகிய சிகிச்சைக்கு காத்திருக்கும் நோயாளர்களுக்கு இது பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார்.
