நாட்டில் தற்போது தொலைபேசியால் எத்தனையோ நன்மைகளும் தீமைகளும் மக்களுக்கு நடந்து வருகின்றது. இதில் இருந்து அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதற்காக தொலைபேசியால் ஏற்படும் பாதிப்புகள் இழப்புக்களை எடுத்துக்கூறும் வகையில் இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாங்குளம் வன்னிவிளாங்குளம் பகுதியினை சேர்ந்த கவிஞர் ஆர்.கண்ணன் எழுதிய தொலைபேசியால் மாழும் மனிதம் என்ற பாடல் இறுவட்டு வெளியீட்டு நிகழ்வு 22.03.2026 அன்று வன்னிவிளாங்குளம் பொது விளையாட்டு மைதானத்தில் சிறப்புற நடைபெற்றுள்ளது.
தாயக கலைஞர்களின் படைப்பான இந்த பாடலுக்கு பி.எஸ்.விமல் இசையமைத்துள்ளார் ஒலிசேர்கையினை எம்.பகி அவர்களும் பாடலினை என்.ரமணன் அவர்களும் பாடியுள்ளார்கள்.
இறுவட்டு வெளியீட்டு நிகழ்வு தலைமையில் தமிழ்தேசிய செயற்பாட்டாளர் கரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்.
இந் நிகழ்வில் விருந்தினர்களாக தமிழ்தேசிய இலக்கிய படைப்பாளி தீபச்செல்வன் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தின் செயற்பாட்டாளர் வீரமணி, போராளிகள் நலன்புரி சங்கத்தின் யாழ்மாவட்ட தலைவர் ஈஸ்வரன்,மல்லாவி வர்த்தக சங்கத்தலைவர் வினோத், மாங்குள பிரதேச தமிழ்தேசிய செயற்பாட்டாளர் சிந்துஜன், மாவீரரின் பெற்றோர் கந்தையா, துணுக்காய் பிரதேச சபையின் தவிசாளர் செந்தூரன், மாந்தை கிழக்கு பிரதேச சபையின் உபதவிசாளர் வரதன் ஓய்வு நிலை அதிபர் திரு.யோகானந்தம், கே.பி.கே. நிறுவனத்தின் உரிமையாளர் நேசன் ,போராளிகள் நலன்புரி சங்கத்தின் கிளிநொச்சி மாவட்ட செயற்பாட்டாளர் குயிலன் உள்ளிட்ட தமிழ்தேசிய பற்றாளர்கள் என பலர் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்கள்.
குறித்த இறுவட்டின் முதல் பிரதிநியினை வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் அவர்கள் வெளியீட்டு வைக்க கே.பி.கே. நிறுவனத்தின் தொழில் அதிபர் அதனை பெற்றுக்கொண்டதை தொடர்ந்து பிரமுகர்களுக்கு இறுவட்டுக்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. நிகழ்வில் பாடல் ஆசிரியர், இசையமைப்பாளர், பாடியவர் இசைகோர்வை செய்தவர்கள் விருந்தினர்களினால் மதிப்பளிக்கப்பட்டுள்ளார்கள்.
