இராணுவ வீரர்கள் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தி வந்த பழைய ரகத் துப்பாக்கிகளை மாற்றிவிட்டு, புதிய ரக நவீன துப்பாக்கிகளை வாங்குவதற்கான 307 மில்லியன் டொலர் மதிப்பிலான ஒப்பந்தத்தை மத்திய அரசு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தற்போது இராணுவத்தில் பயன்பாட்டிலுள்ள C7 மற்றும் C8 ரகத் துப்பாக்கிகள் அவற்றின் ஆயுட்காலத்தை விடக் கூடுதல் காலம் பயன்படுத்தப்பட்டுவிட்டன.
அவற்றுக்குப் பதிலாக, ‘கனடியன் மாடுலர் அஸால்ட் ரைபிள்’ (CMAR) எனப்படும் புதிய தொழில்நுட்பத் துப்பாக்கிகள் வாங்கப்படவுள்ளன.
ஒன்டாரியோவின் கிச்சனர் பகுதியில் உள்ள ‘கோல்ட் கனடா’ (Colt Canada) நிறுவனம் இந்தத் துப்பாக்கிகளைத் தயாரித்து வழங்கவுள்ளது.
முதல் கட்டமாக அடுத்த மூன்று ஆண்டுகளில் 30,000 துப்பாக்கிகள் மத்திய அரசுக்கு வழங்கப்படவுள்ளன.
ஒவ்வொரு துப்பாக்கியிலும் 80 சதவீதப் பாகங்கள் கனடாவிலேயே தயாரிக்கப்படும் எனவும் அவற்றுக்கான தோட்டாக்கள் (Ammunition) முழுமையாகக் கனடாவிலேயே உற்பத்தி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
