யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலையால் தீவக பகுதிகளில் பலத்த காற்று வீசி வருவதனால் , தீவகத்திற்கான படகு சேவைகள் தாமதமாகியுள்ளன.
ஊர்காவற்றுறை, கண்ணகி அம்மன் இறங்கு துறையில் இருந்து எழுவைதீவு மற்றும் அனலைதீவு செல்லும் பயணிகள், அரச உத்தியோகத்தர்கள் போக்குவரத்து சிரமங்களை எதிர்கொண்டுனர்.
படகுகள் கடல் அலையின் சீற்றம் காரணமாக இறங்கு துறையில் தரித்து நிற்க முடியாமலும் கடலில் பயணிக்கமுடியாத நிலையிலும் காணப்பட்டன.
