கியூபெக் மாகாணத்தில் இரண்டு குழந்தைகளின் உயிரிழப்பிற்குக் காரணமான பியர் நை செயிண்ட்-அமாண்ட் (Pierre Ny St-Amand) என்பவர், அதி-ஆபத்தான குற்றவாளி (High-risk offender) என நீதிமன்றத்தால் இன்று அறிவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2023-ஆம் ஆண்டு லாவல் நகரில் உள்ள முன்பள்ளி (Daycare) ஒன்றின் மீது பேருந்தை மோதியமை தொடர்பிலேயே, இவர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டார்.
இந்த வழக்கினை விசாரித்த கியூபெக் உயர் நீதிமன்ற நீதிபதி எரிக் டவுன்ஸ் (Justice Éric Downs), இன்று 103 பக்கங்கள் கொண்ட விரிவான தீர்ப்பை வழங்கினார். ஏற்கனவே இந்த ஓட்டுநர் மனநலப் பாதிப்பால் பாதிக்கப்பட்டவர் என்பதால் அவருக்குத் தண்டனை வழங்க முடியாது (Not Criminally Responsible) என நீதிமன்றம் கூறியிருந்தது.
இருப்பினும், அவர் செய்த செயல் மிகவும் கொடூரமானது என்பதாலும், எதிர்காலத்தில் மீண்டும் இவ்வாறான தாக்குதல்கள் நடக்க வாய்ப்புள்ளதாலும், அவரை அதி-ஆபத்தானவர் என
அடையாளப்படுத்துவது அவசியம் என நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
