2021-ஆம் ஆண்டு மொன்றியலின் செயிண்ட்-லியோனார்ட் (St-Léonard) பகுதியில் இடம்பெற்ற கொலை தொடர்பான வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
15 வயது சிறுமியான மெரியம் பௌண்டாவி சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான அய்மானே புவாடி (Aymane Bouadi) என்பவரை விடுவிக்குமாறு, அவரது வழக்கறிஞர் கோரியுள்ளார்.
2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ஆம் திகதி, வாகன நிறுத்துமிடம் தொடர்பான இரு தொழிலதிபர்களுக்கு இடையிலான மோதலில், நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இதில் எவ்வித தொடர்புமற்ற மெரியம் பௌண்டாவி என்ற சிறுமி தலையில் குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.
இந்த வழக்கில் சலீம் துவைபி (Salim Touaibi) மற்றும் அய்மானே புவாடி ஆகிய இருவர் மீது முதலாம் நிலை கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் நடந்த இறுதி வாதங்களின் போது, வழக்கறிஞர் மார்ட்டின் லத்தூர் (Martin Latour), அய்மானே புவாடி அக்கொலையில் சம்பந்தப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
