Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் பல டொன் பழுதடைந்த சோள விதைகள்

பிப்ரவரி 23, 2026
படிக்க 2 நிமிடங்கள்
Screenshot
SHARE

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, நடுக்குடா பகுதியில் உரிய அனுமதியின்றி வீதி மற்றும் தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றில் பழுதடைந்த மற்றும் பூஞ்சைகள் நிறைந்த பல ஆயிரம் டொன் சோள விதைகள் களஞ்சிய படுத்தப்பட்டிருந்த நிலையில் மன்னார் சுகாதார துறையினர் குறித்த களஞ்சிய சாலை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மன்னார் நடுக்குடா பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக அதிகளவான சோள விதைகள் உலர விடப்பட்டுள்ளதாக பொது மக்கள் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைவாக மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனை சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கையின் போது மனித நுகர்வுக்கு பொருத்த மற்ற சோள விதைகள் உலரவிடப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.

அதே நேரம் குறித்த களஞ்சிய சாலைக்கோ அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கோ எந்த ஒரு சட்ட அனுமதியோ அல்லது சுகாதார மருத்துவ சான்றிதலோ பெறப்படவில்லை என்றும் முதல் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

அதே நேரம் இவ்வளவு தொகை பழுதடைந்த சோள விதைகள் எவ்வாறு எந்த ஒரு அனுமதியும் இன்றி மன்னார் மாவட்டத்துக்குள் கொண்டு வரப்பட்டது என்பது பற்றியும் இந்த விதைகளை எதற்காக கொண்டு வந்தார்கள் என்பது தொடர்பில் மேலதிக விபரங்களை மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஆய்வு செய்து வருகின்றது.

குறித்த சோள விதைகள் மிகவும் தரம் குறைந்த பழுதடைந்த அதே நேரம் பூஞ்சணம் பிடித்த நிலையில் உரிய சுகாதார வழிகாட்டலை பின்பற்றாது உலர விட பட்டு களஞ்சியப்படுத்த பட்டதன் அடிப்படையில் முதல் கட்டமாக சட்ட நடவடிக்கை மேற்க் கொள்ளப்படவுள்ளது.

அதே நேரம் குறித்த சோள விதைகளை பயன்படுத்தி சட்டவிரோத தரமற்ற சத்துணவு பொருள் ஒன்றை தயாரிப்பதற்கான செயற்பாடுகள் மேற்கொள்வதற்கான செயற்பாடுகள் இடம் பெற்றதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

குறித்த விதைகளை விலங்குனவாக பயன்படுத்தும் வகையில் கூட எந்த ஒரு அனுமதியும் பெறப்படாத நிலையில் நீதி மன்ற அனுமதி பெற்று அணைத்து சோள விதைகளை அழிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

முந்தைய செய்தி மத்திய அரசில் பணியாற்றும் ஊழியர்களுக்கு புதிய உத்தரவு
அடுத்த செய்தி தேசிய மக்கள் சக்தியை கடுமையாக சாடியுள்ள நல்லூர் தவிசாளர்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து விளக்கமளித்தார் பிரதமர்!

ஜூலை 27, 2025
இலங்கை

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

அக்டோபர் 12, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் கோரிக்கையை நிராகரித்தது இலங்கை!

ஜூன் 19, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு சம்பவம் – யாழில் மூவர் கைது!

நவம்பர் 8, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?