ஆர்க்டிக் துருவப் பகுதியின் பாதுகாப்பை உறுதி செய்யவும், கிரீன்லாந்து மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு மிரட்டல்களைச் சமாளிக்கவும் மத்திய அரசு ஆனது டென்மார்க்குடன் கைகோர்த்துள்ளது.
ஜெர்மனியின் மியூனிக் நகரில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில்இதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ராணுவப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், டென்மார்க்கின் ஒரு பகுதியான கிரீன்லாந்து (Greenland) தீவை அமெரிக்காவுடன் இணைக்க விரும்புவதாகத் தொடர்ந்து கூறி வரும் நிலையில், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானமை சர்வதேசக் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆர்க்டிக் பகுதியில் நுழையும் அந்நியக் கப்பல்கள் மற்றும் விமானங்களைக் கண்காணிக்க அதிநவீன ட்ரோன்கள் மற்றும் செயற்கைக்கோள் தரவுகளை இரு நாடுகளும் பகிர்ந்துகொள்ளும் வகையில் இந்த ஒப்பந்தம் வடிவகைக்கப்பட்டுள்ளது.
கடுமையான பனிப்பொழிவு நிலவும் ஆர்க்டிக் பகுதியில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் இணைந்து பயிற்சிகளை மேற்கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.