கனடா நாட்டுப் பயணிகளின் வருகை குறைந்தமை காரணமாக அமெரிக்க சுற்றுலா தலங்கள் கடும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன.
கனேடியர்களின் அமெரிக்கப் பயணங்கள் பல ரத்துச் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிய வருகின்றது.
பல கனேடியர்கள் தாங்கள் அமெரிக்காவில் கொண்டாடத் திட்டமிட்டிருந்த விடுமுறைகளை ரத்து செய்வதாகவும் தெந்திசையிலிருக்கும் அயல்நாட்டை இனி பார்வையிடத் தேவையில்லை என்றும் பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.
இது உடனடியாக அமெரிக்காவின் சுர்றுலாப் பயணத் துறையை வெகுவாகப் பாதித்துள்ளது.
இதனையடுத்து கனேடிய விமான நிறுவனங்கள் அமெரிக்காவிற்கான விமான சேவைகளை குறைத்துள்ளதுடன் சிலவற்றை ரத்து செய்துமுள்ளன.
அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறையின் தரவுகளின்படி, இரு நாடுகளுக்கும் இடையிலான தரைவழி எல்லைகளைக் சட்டபூர்வமாகக் கடக்கும் நடவடிக்கைகள் கணிசமாகக் குறைந்துள்ளன.
அமெரிக்க பயண சங்கத்தின் கூற்றுப்படி, 2024 ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்கு சென்ற சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கையில் பெரும்பங்கினர், கனடாவிலிருந்தே சென்றிருந்தனர்..
இந்த கனேடிய சுற்றுலாப் பயணிகள் ஏறத்தாழ 20 பில்லியன் டாலர்களை அமெரிக்காவினுள் செலவு செய்ததுடன், அமெரிக்காவில் 140,000 தொழில்வாய்ப்புகளுக்கும் ஆதரவளித்துள்ளனர்.
இந்த நிலையில், கனடா நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகைக் குறைவு அமெரிக்காவின் வணிக நிறுவனங்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
