சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் பிரதமர் மார்க் கார்னி ஆற்றிய உரைக்கு, எதிர்க்கட்சித் தலைவர் பியர் பொய்லிவ்ரே ஒருபுறம் பாராட்டு தெரிவித்தாலும், மறுபுறம் அவரது செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
வெறும் அழகான வார்த்தைகளால் மட்டும் தேசத்தைக் கட்டி எழுப்ப முடியாது, முடிவுகளே முக்கியம் என அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தில் பேசிய பிரதமர் கார்னி,பெரிய நாடுகள் வர்த்தகத்தை ஆயுதமாகப் பயன்படுத்துவதை நடுத்தர நாடுகள் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும் என முழங்கினார்.
இது சர்வதேச அளவில் பாராட்டைப் பெற்றாலும், அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனான மோதலுக்கு இதுவே வித்திட்டது.
பிரதமரின் உரையை நேர்த்தியான சொற்பொழிவு என வர்ணித்த பொய்லிவ்ரே, ஆறு பக்க அறிக்கையில் தனது எதிர்ப்பைப் பதிவு
செய்துள்ளார்.
கார்னி பிரதமராகப் பதவியேற்று ஓராண்டு முடியப்போகும் நிலையில், நாட்டின் நிதிப்பற்றாக்குறை இருமடங்காகியுள்ளது எனவும் நாடுகளிலேயே கனடாவில்தான் உணவுப் பொருட்களின் விலைவாசி மிக அதிகமாக உள்ளது எனவும் பொய்லிவ்ரே தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடன் மோதுவதை விட, புத்திசாலித்தனமாகச் செயல்பட வேண்டும் என பொய்லிவ்ரே அறிவுறுத்தியுள்ளார்.
நமது நாட்டின் 10-ல் ஒரு வேலைவாய்ப்பு அமெரிக்க வர்த்தகத்தைச் சார்ந்து இருக்கிறது.
எனவே, அமெரிக்க நிர்வாகத்திற்கு வெளியே உள்ள நட்பு சக்திகளுடன் இணைந்து வர்த்தகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று
பொய்லிவ்ரே கூறியுள்ளார்.
