வான்கூவர் வாகன விபத்தில் பலர் உயிரிழந்தமை தொடர்பான விசாரணைகள் முடக்கி விடப்பட்டுள்ளன.
வான்கூவர் நகரில் நிகழ்ந்த வீதிவிழா ஒன்றில் எதிர்பாராத விதமாக ஒரு வாகனம் கூட்டத்திற்குள் புகுந்து மோதிய விபத்தில், பலர் உயிரிழந்தனர்.
ஈஸ்ட் 41வது அவென்யூ மற்றும் பிரேசர் வீதி சந்திப்பிலேயே இந்த வீதி விழா நடைபெற்றது.
சரியாக இரவு 8 மணியளவில் இந்த அதிர்ச்சிகரமான விபத்து நிகழ்ந்ததாக தெரியவருகின்றது.
மேலும், இந்த விபத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருப்பு நிறத்திலான ஒரு எஸ்யூவி வாகனமே விபத்தை ஏற்படுத்தியுள்ளது.
வான்கூவர் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
விபத்து ஏற்படுத்திய வாகனத்தின் ஓட்டுநரை அவர்கள் உடனடியாக கைது செய்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணை முடிவில் கூடுதல் தகவல்கள் வெளியிடப்படும் என்றும் காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இதேவேளை சமூக ஊடகங்களில் வெளியான இந்த விபத்தின் காணொளிகள், பதற்றமான சூழ்நிலையை வெளிப்படுத்தின.
வான்கூவர் நகர மேயர் கென் சிம் இந்தச் சம்பவம் குறித்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த வேளையில், காவல்துறையினர் பொதுமக்களை பொறுமை காக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

