கடந்த வாரம் காணாமல் போனதாகப் பதிவு செய்யப்பட்ட 15 வயது இளம் பெண் ஒருவர் பத்திரமாக வீடு திரும்பிவிட்டதாக மொன்றியல் காவல்துறை (Montreal Police) அறிவித்துள்ளது.
இந்த இளம்பெண், காவல்துறையினரின் தேடுதல் முயற்சி ஏதுமின்றி, தானாகவே தனது வீட்டிற்குத் திரும்பி வந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
அந்த 15 வயதுடைய இளம்பெண், கடந்த திங்கட்கிழமை மொன்றியலின் லாச்சின் (Lachine) பகுதியில் இறுதியாக காணப்பட்டிருந்தார்.
அதன் பிறகு அவரைக் காணவில்லை என அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த் பெண்ணைக் கண்டுபிடிக்க உதவுமாறு மொன்றியல் காவல்துறை பொதுமக்களிடம் கோரிக்கை ஒன்றையும் விடுத்திருந்தது.
இந்த நிலையில் குறித்த இளம்பெண் வீடு திரும்பிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


