டொரண்டோ நகரின் ஸ்கார்பாரோ டவுன் சென்டர் வணிக வளாகத்தில் வியாழக்கிழமை பிற்பகல் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில், 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், உணவு விடுதிக்கு அருகே உள்ள கழிவறையில் இளைஞரின் சடலத்தைக் கண்டெடுத்தனர்.
சடலத்திற்கு அருகில் துப்பாக்கி ஒன்றும் இருந்தமை அவதானிக்கப்பட்டது.
பிற்பகல் 1:50 மணியளவில் துப்பாக்கிச்சூடு நடந்ததாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவக் குழுவினர், அந்த இளைஞர் உயிரிழந்துவிட்டதை உறுதிப்படுத்தினர்.
தற்போது, இந்த மரணம் ஒரு சந்தேகத்திற்குரிய மரணம் என கண்ணோட்டத்தில் விசாரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
