ஒட்டாவாவில் உள்ள ஈரானின் முன்னாள் தூதரகத்தின் வேலிக்குள் அத்துமீறி நுழைந்த 34 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரைப் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
ஈரானில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒட்டாவாவின் மெட்காஃப் தெருவில் உள்ள ஈரானியத் தூதரகக் கட்டிடத்தின் உயரமான இரும்பு வேலிக்குள் அந்த சந்தேக நபர் திடீரெனக் குதித்துள்ளார்.
கைதுசெய்யப்பட்ட அந்த நபர் மீது ‘அத்துமீறி நுழைதல்’ (Trespassing) மற்றும் ‘பொதுச் சொத்திற்குச் சேதம் விளைவித்தல்’ (Mischief) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2012-ஆம் ஆண்டிலேயே ஈரான் உடனான தூதரக உறவை, கனடா துண்டித்துக்கொண்டது.
இருப்பினும், சர்வதேச விதிகளின்படி அந்தக் கட்டிடத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு கனடா அரசிடம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
