சால்மோனெல்லா பக்டீரியா அபாயம் காரணமாக பெரிய பூசணி விதைகள் திரும்பப் பெறப்படுகின்றன.
விவசாய நிறுவனமொன்றின் பெரிய பூசணி விதைகளை கனடா உணவு ஆய்வு நிறுவனம் ஆனது, நாடு முழுவதிலுமிருந்து திரும்பப் பெற்றுள்ளது.
திரும்பப் பெறப்பட்ட இந்த விதைகளை, பொதுமக்கள் உண்ணவோ, விற்கவோ அல்லது பரிமாறவோ வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சால்மோனெல்லாவால் பாதிக்கப்பட்ட உணவு பார்ப்பதற்கோ அல்லது வாசனை செய்வதற்கோ கெட்டுப்போனதாகத் தெரியாவிட்டாலும், அது நுகர்வோரை நோய்வாய்ப்படுத்தும் என்று அந்த எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சால்மோனெல்லா பக்டீரியா தொற்று ஆனது, இளம் குழந்தைகள், கர்ப்பிணிகள், வயதானவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கு கடுமையான நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தக்கூடும் என்று அந்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.