பிரிட்டிஷ் இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரியை அவமதித்ததற்காக, கனடா இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற கேர்னல் தர அதிகாரிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு நேட்டோ பயிற்சி நடவடிக்கையின்போது, பிரிட்டிஷ் இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரியான பெண் ஒருவரை, கனடா இராணுவத்தின் கேர்னலான ராப் கெர்னி அவமதித்துள்ளார்.
ருமேனியாவில் அமைக்கப்பட்டிருந்த தமது கூடாரத்தில் மற்ற அதிகாரிகள் முன்னிலையில் பிரிட்டிஷ் இராணுவத்தின் பிரிகேடியர் தரநிலை அதிகாரி ஜெனரல் ஐரீனா டிஸிஸ்யூஸ்கா குறித்து அவதூறான கருத்தை ராப் கெர்னி தெரிவித்துள்ளார்.
அந்த அவதூறான கருத்தை ராப் கெர்னி அங்கு தெரிவிக்கும் போது, பிரிகேடியர் ஜெனரல் டிஸிஸ்யூஸ்கா அருகில் இருக்கவில்லை.
எனினும், அங்கு பிரசன்னமாக இருந்த மற்றொரு பிரிடிஷ் இராணுவ அதிகாரி, கனேடிய இராணுவத்திடம் இந்த சம்பவம் குறித்த முறைப்பாட்டை அளித்திருந்தார்.
இதனையடுத்து, அந்த முறைப்பாட்டினை கனடாவின் இராணுவ நீதிமன்றம் விசாரித்தது.
இராணுவ நீதிமன்றத்தில் ஒழுங்கு மற்றும் கட்டுப்பாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் நடத்தை தொடர்பில் தமது குற்றத்தை ராப் கெர்னி ஒப்புக் கொண்டார்.
இராணுவ நீதிபதி அவருக்கு 3,000 டொலர்கள் அபராதம் விதித்ததுடன் கடுமையான கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.