கனடாவின் பசுமைக் கட்சி (Green Party) கடந்த தேர்தலில் ஏற்பட்ட ஒரு மில்லியன் டொலர் ($1 Million) கடன் சுமையை முழுமையாகச் செலுத்தி, தற்போது நிதி ரீதியாகப் பலமான நிலைக்குத் திரும்பியுள்ளதாக அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பசுமைக் கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்தது.
கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாக்குகளின் சதவீதம் 2 சதவீதத்திற்கும் கீழ் குறைந்ததால், தேர்தல் ஆணையத்திடமிருந்து, கிடைக்க வேண்டிய 50 சதவீத நிதி மீளளிப்பை அக்கட்சியால் பெற முடியாமல் போனது.
இதனால் ஏற்பட்ட 7.5 லட்சம் டொலர் வங்கித் கடன் மற்றும் 2.5 லட்சம் டொலர் இதர செலவுகள் என மொத்தமாக, 10 லட்சம் டொலர் கடனில் கட்சி சிக்கியிருந்தது.
இந்நிலையில் தற்போது பசுமைக் கட்சி தனது கடனை நிவர்த்தி செய்துள்ளது.


