தடை செய்யப்பட்ட ‘அசால்ட்’ (Assault-style) ரகத் துப்பாக்கிகளைப் பொதுமக்களிடமிருந்து திரும்பப் பெறும் திட்டத்திற்காக, கியூபெக் மாகாண அரசுக்கு 12.4 மில்லியன் டாலர் நிதி வழங்கப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
வன்முறைகளைக் குறைக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இந்தத் திட்டம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
கடந்த 2020-ஆம் ஆண்டு, சுமார் 2,500 வகையான நவீன ரகத் துப்பாக்கிகளை மத்திய அரசு தடை செய்தது.
இந்தப் போர்க்களத் துப்பாக்கிகளை (Battlefield weapons) வைத்திருக்கும் தனிநபர்களுக்குப் பொருத்தமான இழப்பீடு வழங்கி, அவற்றைத் திரும்பப் பெறுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
கியூபெக்கில் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நிர்வாக மற்றும் போக்குவரத்துச் செலவுகளுக்காக இந்த 12.4 மில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது.
