நாட்டில் நில அளவையாளர் நாயகமாக பணிபுரிந்து வந்த என்.கே.யூ. றோஹண எதிர்வரும் 31 ஆம் திகதி ஓய்வு பெறுகின்றார்.
இந்நிலையில் புதியதொரு நில அளவையாளர் நாயகத்தை நியமிக்க வேண்டிய தேவையுள்ளதால் அப்பதவிக்கு பீ.கே.எல்.எஸ். பண்டுவாவல 2026.02.02 ஆம் திகதி தொடக்கம் நிலஅளவையாளர் நாயகமாக நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி பீ.கே.எல்.எஸ். பண்டுவாவல தற்போது மேலதிக நில அளவை நாயகமாகவும், இலங்கை நிலஅளவை சேவையின் விசேடதர அதிகாரியாகவும் பணிபுரிகின்றார்.


