வெசாக் பண்டிகையையொட்டி இலங்கை இராணுவத்தின் 59 ஆவது படைப்பிரிவினால் புதுக்குடியிருப்பில் வெசாக் வலயம்
வெசாக் பண்டிகையையொட்டி முல்லைத்தீவு மாவட்டத்தில் இலங்கை இராணுவத்தின் 59 ஆவது படைப்பிரிவினால் புதுக்குடியிருப்பு பிரதேச சபை மைதானத்தில் பாரிய வெசாக் வலயம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த மைதானத்தில் வெசாக் கூடுகள் கண்காட்சியும் மக்களுக்கு உணவு மற்றும் ஐஸ்கிரீம் தானமும் வழங்கப்படுகிறது.
குறித்த வெசாக் வலய அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (12.05.2025) மாலை 7.30 மணிக்கு இடம்பெற்றது.
வன்னி பாதுகாப்பு படை தலைமையகத்தின் இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜென்ரல் K M P S B குலதுங்க அவர்களும் முல்லைத்தீவு 59 ஆவது படைப்பிரிவு கட்டளை தளபதி மேஜர் ஜென்ரல் D R N ஹெட்டியாராச்சி அவர்களும் கலந்துகொண்டு வெசாக் கூடுகள் கண்காட்சியை திறந்து வைத்தனர்.
இதனை தொடர்ந்து கொக்கிளாய் விகாரை விகாராதிபதி அவர்களின் மத வழிபாட்டுடன் அன்னதானம் மற்றும் ஐஸ்கிரீம் தானம் என்பன வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

