ஒன்டாரியோ மாகாணத்தில் அமைந்துள்ள டிமின்ஸ் (Timmins) நகரம் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான பனிப்புயலைச் சந்தித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் சுமார் 60 சென்றி மீட்டர் அளவு, பனி பொழிந்துள்ளதால், புத்தாண்டு தினமான இன்று ஒட்டுமொத்த நகரமும் பனிப்போர்வைக்குள் முடங்கியுள்ளது.
இந்த அதீத பனிப்பொழிவு காரணமாக, டிமின்ஸ் (Timmins) நகரத்தில் போக்குவரத்து, மின்சாரம் மற்றும் அத்தியாவசிய சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 29 ஆம் திகதி முதல் பெய்யத் தொடங்கிய இந்தப் பனிப்புயல், 1983-ஆம் ஆண்டிற்குப் பிறகு பதிவான மிகப்பெரிய பனிப்பொழிவாகக் கருதப்படுகிறது.
டிமின்ஸ் (Timmins) நகரத்தை மற்ற நகரங்களுடன் இணைக்கும் நெடுஞ்சாலைகள் மூடப்பட்டதால், பால் பண்ணை விவசாயிகள் தங்கள் உற்பத்தியைச் சந்தைக்குக் கொண்டு செல்ல முடியாமல் போனதுடன், ஆயிரக்கணக்கான லீட்டர் பாலைக் கொட்டும் அவலநிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
