பிராம்ப்டன் நகரின் பரபரப்பான வணிக வளாக வாகன நிறுத்துமிடத்தில் (Parking Lot) நடந்த துப்பாக்கிச் சூட்டு வழக்கில், மூன்று இளைஞர்களைப் பீல் பிராந்திய காவல்துறையினர் (Peel Regional Police) கைது செய்துள்ளனர்.
கடந்த டிசம்பர் 8-ஆம் திகதி நடந்த இந்தச் சம்பவத்தில் 25 வயது இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார்.
கொல்லப்பட்ட நபர் பிராம்ப்டனைச் சேர்ந்த ஜஸ்கர்ன் தாலிவால் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இது ஒரு திட்டமிட்ட பழிவாங்கும் நடவடிக்கை (Isolated Incident) என தாம் கருதுவதாக, காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தற்போது கைது செய்யப்பட்ட மூன்று நபர்கள் மீதும் முதல் நிலை கொலைக் குற்றச்சாட்டு (First-Degree Murder) பதிவு செய்யப்பட்டுள்ளது.


