நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த 19 ஹைதி (Haiti) நாட்டு ஏதிலிகளில் ஒரு பகுதியினரை, கனடா எல்லை பாதுகாப்பு முகமை (CBSA) மீண்டும் அமெரிக்காவிற்குத் திருப்பி அனுப்பியுள்ளது.
கியூபெக் மாகாணத்தில் அமைந்துள்ள அமெரிக்க- கனடா எல்லையைத் தாண்டியே, அவர்கள், நாட்டிற்குள் நுழைந்துள்ளனர்.
இச்சம்பவம் கிறிஸ்துமஸ் தினத்தன்று இடம்பெற்றது.
இந்தக் குழுவினர் மொன்றியலுக்குத் தெற்கே உள்ள ஹேவ்லாக் (Havelock) காடுகளில், உறைபனி குளிரில் பதுங்கியிருந்தபோது போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
‘பாதுகாப்பான மூன்றாவது நாடு’ (Safe Third Country Agreement) ஒப்பந்தத்தின் கீழ் அவர்கள் கனடாவில் தஞ்சம் கோரத் தகுதியற்றவர்கள் எனக் கருதப்பட்டதால், தற்போது அவர்கள் அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.


