கியூபெக் மாகாணத்தில் குடும்ப வன்முறையினால் (Domestic Violence) பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதித்துறை இழைக்கும் அநீதி குறித்துப் புதிய புகார்கள் எழுந்துள்ளன.
வன்முறையில் ஈடுபடும் ஆண்களின் வேலை மற்றும் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, நீதிமன்றங்கள் அவர்களுக்கு மிகக் குறைவான தண்டனைகளை வழங்குவதாகப் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அண்மையில், கத்தியால் தாக்குதல், கழுத்தை நெரித்தல் மற்றும் கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்ட ஒரு நபருக்கு, அவர் வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதற்காக “வார இறுதி நாட்களில் மட்டும் சிறை” (Weekend Jail) என்ற தண்டனை வழங்கப்பட்டது.
நீதிமன்றங்களின் இத்தகைய மென்மையான போக்கு காரணமாக, வன்முறையைச் சந்திக்கும் பெண்கள் புகார் அளிக்கவே அச்சப்படுகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


