மொன்றியல் நகரில் உள்ள ஒரு கடையில், கிறிஸ்துமஸ் தாத்தா மற்றும் அவரது பூதங்கள் (Elves) வேடத்தில் வந்த ஒரு கும்பல், சுமார் 3,000 டொலர் மதிப்புள்ள உணவுப் பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றமை குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அந்த கும்பலைச் சேர்ந்த அனைவரும் கடையில் இருந்த தள்ளுவண்டிகளில் விலை உயர்ந்த உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வேகமாக நிரப்பிய பின்னர், அவற்றுக்கான பணத்தைச் செலுத்தாமல் கூட்டமாகத் தப்பிச் சென்றுள்ளனர்.
தங்களை என்று அழைத்துக்கொள்ளும் ஒரு போராட்டக் குழுவினர் இந்தக் கொள்ளைக்குப் பொறுப்பேற்றுள்ளனர்.
அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்துள்ள நிலையில், பெரிய நிறுவனங்கள் மட்டும் கோடிக்கணக்கில் லாபம் ஈட்டுவதைக் கண்டித்து இந்தச் செயலில் ஈடுபட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.
திருடப்பட்ட உணவுகள் வீணாக்கப்படவில்லை என்றும், அவை நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள பொது உணவக பெட்டிகளிலும் ஏழை மக்கள் வாழும் பகுதிகளிலும் உடனடியாக விநியோகிக்கப்பட்டதாகவும் அந்தக் குழு தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மொன்றியல் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
