இந்தோனேசிய தலைநகர் ஜகர்த்தாவில் அமைந்துள்ள 7 அடுக்குமாடி அலுவலகக் கட்டடமொன்றில் இன்றையதினம் (9) திடீரென தீ விபத்தொன்று ஏற்பட்டதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இத்தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான பணிகளை இந்தோனேசிய தீயணைப்பு படையினர் செயற்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அலுவலகத்தில் பணியாற்றி வந்தோரில் சுமார் 17 பேர் தீயினால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த தீ ஏ ற்பட்டமைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


