மொன்றியலில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த உக்ரைனிய அகதிக் குழந்தை மரணம் தொடர்பாக வெளியான தலைமை மரண விசாரணை அறிக்கை அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளது.
2022 டிசம்பர் மாதம் மரியா லெகென்கோவ்ஸ்கா (Mariia Lehenkovska) என்ற பெயருடைய 7 வயது சிறுமி தனது சகோதர, சகோதரிகளுடன் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தபோது, வாகன விபத்துக்கு உள்ளானார்.
அந்த வாகனத்தை ஜுவான் மானுவல் பெசெரா கார்சியா (Juan Manuel Becerra Garcia) என்ற வாகனச் சாரதி செலுத்தியுள்ளார்.
போதிய திட்டமிடல் இல்லாத கட்டுமானப் பணிகளுக்கான சுற்றுப்பாதைகளும் (Detours), வாகனச் சாரதியின் பார்வையை மறைத்த குறைந்த சூரிய ஒளியும் இந்தத் துயரச் சம்பவத்துக்கு முக்கிய காரணங்களாக இருந்ததாக மரண விசாரணை அதிகாரி எரிக் லெப்பைன் (Éric Lépine) தெரிவித்துள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய வாகனச் சாரதியின் கவனக்குறைவே அந்த குழந்தைக்கு ஏற்பட்ட விபத்தின் முதன்மையான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், நெடுஞ்சாலைப் பணியால் ஏற்பட்ட சுற்றுப்பாதையின் விளைவாகவே அந்த ஓட்டுநர் குடியிருப்பாளர்கள் அதிகம் உள்ள பள்ளிப் பகுதிக்கு வந்து சேர்ந்தார் என்று மரண விசாரணை அதிகாரி லெப்பைன் வலியுறுத்தியுள்ளார்.
