தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அத்தனகலு ஓயா, கம்பஹா நகரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள் அடுத்த 6 மணி நேரத்திற்குள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும், இந்தப் பகுதிகள் வழியாக பயணிக்கும் ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளும் தங்கள் உயிர்களையும் சொத்துக்களையும் பாதுகாக்க மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
