டொராண்டோ பொலிஸ், தனது அருகாமைச் சமூக அதிகாரி திட்டத்தை நான்கு புதிய பகுதிகளுக்கு விரிவுபடுத்துவதுடன், TTC சுரங்கப்பாதையின் முக்கியப் பிரிவுகளில் தமது இருப்பை அதிகரிக்கப் போவதாகப் பொலிஸ் தலைமை அதிகாரி மைரன் டெம்கிவ் அறிவித்தார்.
பாதுகாப்பை மேம்படுத்தவும், சமீபத்திய வன்முறைச் சம்பவங்களுக்குப் பதிலளிக்கவும், இந்த ஆண்டு இறுதிக்குள் மொத்தம் 24 அதிகாரிகள் புதிதாக நியமிக்கப்படுவார்கள்.
இதில் 16 அதிகாரிகள் புதிய குடியிருப்புகளுக்கும், எட்டு அதிகாரிகள் TTC-சுரங்கப்பாதைக்கும் ஒதுக்கப்படுவார்கள்.
அதிகளவிலான வன்முறைச் சம்பவங்கள் மற்றும் இளைஞர்கள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் பதிவான பகுதிகளைக் குறிவைத்தே, டொராண்டோ பொலிஸ் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.


