நியூ பிரன்ஸ்விக் மாகாணத்தில் உள்ள செயின்ட் ஜான் நதிக்கு மேலாக அமைந்துள்ள ஃப்ளோரன்ஸ்வில் பாலம், அதாவது ஜூலை 18, 2025 வெள்ளிக்கிழமை தொடங்கி ஐந்து முழு வார இறுதிகளுக்கு மூடப்படவுள்ளது.
இனி வரவிருக்கும் குளிர்காலத்திற்குள் பாலம் முழுமையாகச் செயல்படுவதை உறுதி செய்வதற்கான துரிதப்படுத்தப்பட்ட கட்டமைப்புப் பழுதுபார்ப்புச் செயற்பாடுகள் இப்பாலத்தில் முன்னெடுக்கப்படவுள்ளன.
இருப்பினும், இந்த நடவடிக்கை, உள்ளூர் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஃப்ளோரன்ஸ்வில் பாலம் வெள்ளி மாலை 6 மணி முதல் திங்கள் காலை 6 மணி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
