நிதியமைச்சர் ஃபிராங்கோயிஸ்-பிலிப் ஷாம்பெயின் தனது முதல் மத்திய பட்ஜெட் ஆனது புதிய தலைமுறைக்கான முதலீடுகளை வழங்கும் என்றும்,
எதிர்க் கட்சிகள் உட்பட அனைத்துக் கனேடியர்களுக்கும் சாதகமான அம்சங்களைக் கொண்டிருக்கும் என்றும் உறுதியளித்துள்ளார்.
பட்ஜெட்டை நிறைவேற்ற மூன்று வாக்குகளே குறைவாக உள்ள நிலையில், பிரதமர் மார்க் கார்னியின் தலைமையிலான சிறுபான்மை லிபரல்
அரசாங்கத்திற்கு இது மிகவும் முக்கியமான தருணமாக மாறியுள்ளது. பட்ஜெட்டை நிறைவேற்ற மூன்று வாக்குகளே குறைவாக உள்ள நிலையில்,
எதிர்க்கட்சிகளின் ஆதரவின்றி பட்ஜெட் தோல்வியுற்றால், அது நம்பிக்கை வாக்கெடுப்பு நிலையை ஏற்படுத்தி, நாட்டில் முன்கூட்டிய தேர்தலுக்கு
வழிவகுக்கும் எனக் கூறப்படுகின்றது.
இந்த நிலையில், நிதி அமைச்சர் தமது பட்ஜெட்டை எதிர்க்கட்சிகளும் ஆதரிக்கும் என்று நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். இந்த பட்ஜெட் உள்நாட்டு முதலீட்டை அதிகரிப்பதிலும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கீழ் அதிகரித்து வரும் பாதுகாப்புக் கொள்கையிலிருந்து வர்த்தகத்தை விலக்கி வைப்பதிலும் அதிக கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
