வடகிழக்கு நேபாளத்தின் யாலுங் ரி மலையில் உள்ள ஒரு முகாமில் ஏற்பட்ட பனிச்சரிவில் கிழக்கு நேபாளத்தில் மூன்று பிரான்ஸ் நாட்டினர், ஒரு கனடியன், ஒரு இத்தாலியன் என ஐந்து வெளிநாட்டினர் மற்றும் இரண்டு நேபாளிகள் உட்பட குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் சிலர் காணாமல் போயுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
5,630 மீட்டர் (18,471 அடி) உயரமுள்ள யாலுங் ரி மலையில் ஏறிக்கொண்டிருந்த 15 பேர் கொண்ட குழு மீது பனிச்சரிவு ஏற்பட்டதாகவும், பயணத்தில் நான்கு பேர் எஞ்சியுள்ளதாகவும் காணாமல் போனோரை தேடும் பணிகள் நடைபெறுவதுடன் உள்ளூர் அதிகாரிகளை மேற்கோள் காட்டி, காத்மாண்டு போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
