இன்று கனடிய பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் Juanita Nathan அவர்கள், இலங்கையின் செம்மணி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பொதுக் குழிகள் குறித்து உரையாற்றினார். அங்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 240 க்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்று அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
“இவ்வாறு காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு உண்மை, நீதி மற்றும் பொறுப்பேற்பு வழங்கப்பட வேண்டும். காணாமல் போனவர்களை நினைவுகூர்ந்து, குடும்பங்களுடன் ஒற்றுமையாக நின்று, உண்மை மற்றும் நீதி மேலும் தாமதிக்க முடியாது என்பதை இந்த பாராளுமன்றம் வலியுறுத்த வேண்டும்” என்று கூறினார்
இதன் மூலம் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களை உலக நாடுகளின் அரசியலமைப்புக் குழுக்கள் தொடர்ந்து எடுத்துரைப்பதன் அவசியத்தை அவர் மீண்டும் நினைவூட்டினார்.
