ரென்ஃப்ரூவில் உள்ள நெடுஞ்சாலை 17-ல் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடந்த விபத்தில், காரில் பயணித்த இரண்டு பெண்கள் உயிரிழந்தமை குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த விபத்துச் சம்பவம் செவ்வாய்க்கிழமை மதியம் 12:45 அளவில் ஏற்பட்டதாக, ஒன்டாரியோ மாகாண காவல்துறை (OPP) தகவல் அளித்துள்ளது.
இந்த பெண்கள் பயணித்த கார் ஒரு பிக்கப் ட்ரக்குடன் மோதியதே இந்த விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகின்றது.
54 வயதுடைய பெண்ணும் மற்றும் 78 வயதுடைய பெண்ணும் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் கியூபெக் மாகாணத்தின் வால்-டெஸ்-மாண்ட்ஸ் (Val-des-Monts) பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
