கியூபெக்கில் உள்ள அதிகபட்சப் பாதுகாப்புச் சிறைச்சாலையில் கனடாவின் பிரபல தொடர் கொலையாளி ராபர்ட் பிக்டனை (Robert Pickton) கொலை செய்த குற்றவாளி மார்ட்டின் சாரெஸ்ட், வாக்குமூலம் அளித்துள்ளார்.
“தொடர் கொலையாளி ராபர்ட் பிக்டனால் பாதிக்கப்பட்டவர்களுக்காகவே” தான் அவரைக் கொன்றதாக நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில், அவர் தெரிவித்துள்ளார்.
போர்ட்-கார்டியர் (Port-Cartier) சிறைச்சாலையில் மே 2024 இல் பிக்டனை உடைந்த கம்பியால் (broom handle) தாக்கியதாக, மார்ட்டின் சாரெஸ்ட் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளாகிய பிக்டன் 12 நாட்களுக்குப் பிறகு 2024 மே மாதம் 31 ஆம் திகதி அன்று மருத்துவமனையில் உயிரிழந்தார்.
பலத்த அடியால் ஏற்பட்ட கடுமையான அதிர்ச்சியே (blunt polytrauma) பிக்டனின் மரணத்திற்குக் காரணம் என்று நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்ட அறிக்கையில் (statement of facts) தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மார்ட்டின் சாரெஸ்ட் தம்மீது சுமத்தப்பட்ட கொலைக் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
பிரபல தொடர் கொலையாளி ராபர்ட் பிக்டன் தனது குற்றங்களைப் பற்றி சிறைக்குள் பெருமையாகப் பேசியதே, இந்த கொலைக்கு முக்கிய காரணம் என்று மார்ட்டின் சாரெஸ்ட் நீதிபதியிடம் கூறியுள்ளார்.
